உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
40 பார்வைகள்

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்திரசேனவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (07) உத்தரவிட்டிருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிணை நிபந்தனைகளை சந்திரசேன மீறியதாகக் கூறி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் இந்த பிடியாணை உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

தேசிய விமான நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், கடந்த மார்ச் 12 ஆம் திகதி சந்திரசேன கைது செய்யப்பட்டார்.

பின்னர், கடந்த செவ்வாய்க்கிழமை (05) கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது. அப்போது, 500,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இருப்பினும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்காக இரு நபர்களுக்கு தலா 15,000 ரூபாய் பணம் வழங்கி, அவர்களை பிணையாளர்களாக சந்திரசேனவை முன்னிறுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

இந்தச் செயல் நீதிமன்றம் அவர் மீது வைத்த நம்பிக்கையை மீறுவதாகும் என சுட்டிக்காட்டிய ஆணைக்குழு, 1997-ஆம் ஆண்டின் 30-ஆம் இலக்க பிணைச் சட்டத்தின் கீழ் அவரது பிணையை இரத்து செய்து, வழக்கு முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரியது. இதனையடுத்தே சந்திரசேனவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

2013-ஆம் ஆண்டு 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 விமானங்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தின் போது, 16 மில்லியன் அமெரிக்க டொலரை இலஞ்சமாகப் பெற சதி செய்ததாகவும், அதில் 1.45 மில்லியன் யூரோக்களை சிங்கப்பூரில் உள்ள வங்கிக் கணக்கில் பெற்றதாகவும் சந்திரசேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

புரூணையில் தனது மனைவியின் பெயரில் ஒரு போலி நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலமாக சிங்கப்பூர் வங்கிக் கணக்கிற்கு இந்தப் பணத்தைப் பெற்றதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சந்திரசேன முன்னதாக 2020 பெப்ரவரி மாதமும் இதே போன்ற ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0