தொழிலாளியை தாக்கிய உதவி முகாமையாளர் 13 ம் திகதி வரை விளக்கமறியலில்!
மஸ்கெலியா பகுதியில் உள்ள ஆர்.பி.கோ.பெருந்தோட்டயாக்கத்திற்க்கு உரித்தான மஸ்கெலியா மொக்கா தோட்ட எய்ம்ஸ் பீக் பிரிவில் 5 ம் திகதி இரவு தோட்ட உதவி முகாமையாளர் ஒருவரால் தோட்ட காவலாளி நேற்று 6 ம் திகதி அதிகாலை வேளையில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்த பின்னர் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தொழிலாளி தாக்குதல் சம்பவமாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் செய்ய பட்ட புகார் பதிவை தொடர்ந்து நேற்று 6 ம் திகதி மஸ்கெலியா பொலிசார் சம்பந்தப்பட்ட மொக்கா தோட்ட எய்ம்ஸ் பீக் பிரிவில் உள்ள உதவி முகாமையாளர் கைது செய்யப்பட்டு இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட்ட போது சந்தேக நபரை எதிர்வரும் மே மாதம் 13 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.