உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 12,000 இணையவழி குற்ற முறைப்பாடுகள்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
20 பார்வைகள்

கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக சுமார் 12,000 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று 07 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் பெறப்பட்ட சுமார் 2,300 முறைப்பாடுளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டில், பெண்களுக்கு எதிரான 4103 இணையவழிக் குற்றங்கள் பதிவாகின, அவற்றில் 753 குற்றங்கள் தீர்க்கப்பட்டன.

மேலும் 3348 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளும் வழக்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2024-ஆம் ஆண்டில் பெறப்பட்ட 3159 முறைப்பாடுகளில், 982 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மேலும் 2177 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளும் வழக்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2025-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக 4,742 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன.

இவற்றில் 572 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் 4,170 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளும் வழக்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

36 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

38 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

55 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0