உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கொழும்பில் விசேட போக்குவரத்து!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முன்னிட்டு, இன்றும், நாளையும் கொழும்புக்குள் ஒரு விசேட போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கொழும்புக்கு வரும் வாகன அணிவகுப்பின் போதும், மீண்டும் மே 8 ஆம் திகதி காலை மற்றும் மாலை வேளைகளில் ஜனாதிபதி செயலகம், கொழும்பு பொது நூலகம், இலங்கை நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்கான வியட்நாம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பயணங்களின் போதும் இந்த விசேட போக்குவரத்து செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, மே 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

முக்கியப் பிரமுகர்களின் பயணத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக, கனரக வாகனங்கள் சம்பந்தப்பட்ட வழித்தடங்களில் செல்லத் தடை விதிக்கப்படும். ஏனைய வாகனங்கள் வாகன அணிவகுப்பு செல்லும் போது தற்காலிகக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.

குறிப்பிட்ட நேரங்களில், வாகன ஓட்டிகள் அதற்கென ஒதுக்கப்பட்ட மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேவேளையில், சிரமங்களைக் குறைக்கும் பொருட்டு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு பொலிஸார் மேலும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

35 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

37 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

50 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0