உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மதுபானசாலை திறப்பதற்கு எதிராக போராட்டம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
26 பார்வைகள்

நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது நோர்வூட் நகரில் புதிதாக ஒரு மதுபானசாலை திறப்பதற்கு எதிராக இன்று 06.05.2026 திகதி காலை 9.00.மணி முதல் 10.30. மணி வரை நோர்வூட் நகர மக்கள் மற்றும் நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெருந்தோட்ட மக்கள் இணைந்து கருப்பு நிற கொடி ஏற்றி நோர்வூட் நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களை பூட்டி போராட்டம் ஒன்றை நடத்தினார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஏற்கனவே 4 மதுபானசாலைகள் உள்ளன. மேலும் மேலும் ஏன் மதுபானசாலை, மலையக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் திட்டமிட்டு மதுபான விற்பனை நிலையங்கள் திறப்பது எதற்காக, அடுத்த அடுத்த வரும் அரசாங்கங்கள் நுவரெலியா மாவட்டத்தில் அதிகளவில் மதுபான விற்பனை நிலையங்கள் திறப்பது யார் நன்மைக்காக, இலக்கு வைப்பது பெருந்தோட்ட தொழிலாளர்களை என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நகருக்கு ஒரு ( ச.தோ.ச) கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் திறக்கபட்டு அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் நலன் பேண இன்றைய அரசாங்கம் முன் வர வேண்டும்.

அதனைத் தவிர்த்து நுவரெலியா, கண்டி, பதுளை மாவட்டங்களில் இனியும் ஒரு மதுபான விற்பனை நிலையங்கள் கூட திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்ற கோரிக்கை முன் வைத்து இப் போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0