எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு.!
அநுராதபுரம் – நொச்சியாகம பகுதியில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (04) கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
முழங்கால் வரை எரிந்துள்ள சடலம், ஒரு பெண்ணுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.