உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அரச திறைசேரியில் 80 கோடி ரூபாய் மாயம்; அரசு பொறுப்பேற்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
38 பார்வைகள்

அரச திறைசேரியில் சுமார் 80 கோடி ரூபா பணம் காணாமல்போயுள்ளது என்றும், இதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நேரடிப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் தலைமைப் பணிமனையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பிய டொலர் வருமானம் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்பட்ட மக்களின் பணமே இவ்வாறு மாயமாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய வங்கியிடமிருந்த கடன் முகாமைத்துவப் பணிகள் நிதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் சந்தர்ப்பத்திலேயே இவ்வாறான பாரிய முறைகேடு இடம்பெற்றிருப்பது, அரசின் நிதி முகாமைத்துவக் கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதையே காட்டுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிதி விவகாரம் தொடர்பாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி ஒருவரின் மரணம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க கடும் சந்தேகம் எழுப்பினார்.

“அதிகாரியின் மரணத்தைப் பொலிஸார் முன்கூட்டியே ‘தற்கொலை’ எனத் தீர்மானிப்பது சிக்கலானது.

அரசு தனது தவறுகளை மறைக்க உயிரிழந்த அதிகாரி மீது பழியைச் சுமத்த முயல்கின்றது.

அனுபவமற்ற ஜே.வி.பி. உறுப்பினர்களைத் திறைசேரியின் முக்கிய பதவிகளில் நியமித்ததே இக்குழப்பங்களுக்குக் காரணம்.” – என்றும் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.

மே முதலாம் திகதி மக்கள் எதிர்ப்பைத் தவிர்க்கவே, எரிபொருள் விலை அதிகரிப்பை அரசு திட்டமிட்டு மே இரண்டாம் திகதிக்கு மாற்றியது என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

பெற்றோலுக்கு 49% மற்றும் டீசலுக்கு 64% என அதிகப்படியான வரிகளை அரசு அறவிடுகின்றது என்றும், ஒரு லீற்றர் எரிபொருளில் 100 ரூபா நட்டம் ஏற்படுவதாக அரசு கூறுவது முற்றிலும் பொய் என்றும் அவர் வெளிப்படுத்தினார்.

ஜனாதிபதி மே தினக் கூட்டங்களுக்காகப் பெருமளவிலான அரச வாகனங்களையும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரையும் பயன்படுத்தி சுமார் 30 முதல் 40 மில்லியன் ரூபா வரையிலான மக்கள் பணத்தை வீணடித்துள்ளார் என்றும் அவர் மேலும் சாடினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

31 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

36 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0