யாழில் இடம்பெற்ற கோர விபத்து; இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!
யாழ்ப்பாணம் – கோப்பாய் சந்திக்கும் பிரதேச செயலகத்திற்கும் இடையில் நேற்று (4) நள்ளிரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் நெல்லியடி கரவெட்டியைச் சேர்ந்த 22 வயதுடைய சிவநேசன் குஜிந்தன் மற்றும் 24 வயதுடைய ஏழுமலை துஷாந்தன் ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த போது உந்துருளி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீடு ஒன்றின் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.