உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

உயிர்காப்பு அங்கியை அணிய மறுத்த அர்ச்சுனா எம்.பியால் வாக்குவாதம்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, படகுப் பயணத்தின் போது கட்டாயமாக அணிய வேண்டிய உயிர்காக்கும் அங்கியை (Life Jacket) அணிய மறுத்து சக பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வழக்கமான படகுப் பயணத்தின் போது, பாதுகாப்பு நடைமுறைகளுக்காக அனைத்துப் பயணிகளும் உயிர்காக்கும் கவசத்தை அணியுமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஏனைய பயணிகள் அதனை அணிந்த போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தமக்கு நீச்சல் தெரியும் எனக் கூறி அதனை அணிய மறுத்துள்ளார்.

இதனால் சுமார் அரை மணித்தியாலத்துக்கு மேலாகப் பயணம் தாமதமடைந்ததுடன், அதிருப்தியடைந்த பயணிகள் மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு பாதுகாப்பு விதிகளுக்கு முன்னுதாரணமாக இருக்குமாறு அவரிடம் சுட்டிக்காட்டினர்.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், இறுதியாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உயிர்காக்கும் அங்கியை அணிந்த பின்னரே படகுப் பயணம் தொடரப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு
எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

31 0 0
இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.…

36 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

46 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0