உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

கடந்த 57 ஆண்டுகளாக செப்பனிட படாமல் உள்ள வடிகால்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

மஸ்கெலியா நகரில் உள்ள பிரதான வீதியில் உள்ள சுமார் 100 அடி நீளம் கொண்ட வடிகால் செப்பனிட படாமல் உள்ளதால் அந்த வடிகால் பகுதியில் உள்ள 12 குடியிருப்பில் வசித்து வரும் மக்கள் பாரிய இன்னல்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

1968 ம் ஆண்டு காலப் பகுதியில் முன்னைய மஸ்கெலியா நகரம் நாட்டின் மின்சார தேவைக்காக மவுஸ்சாகலை நீர் தேக்க அமைப்பால் புதிய நகரம் அமைக்கப்பட்டது.

அக் காலத்தில் மஸ்கெலியா புதிய நகரம் ஒன்றை உருவாக்க அப்போதைய அரசு முன் வந்து ஒரு சிகரத்தில் மஸ்கெலியா நகரை அமைத்த போது அப்போதைய கிராம சபை இந்த வடிகால் அமைப்பை முறையாக இந்த 180 அடி பகுதியை அமைக்க வில்லை.

அதன் பின்னர் மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் மற்றும் அம்பகமு பிரதேச சபை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைக்கு வந்த தவிசாளர்களுக்கு எடுத்து கூறியும் எவரும் கண்டு கொள்ளாமல் கை விட்டு உள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அமைச்சு மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் முன் வந்து இந்த வடிகாலை செப்பனிட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்முதலை தாக்கிப் பலி! கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்…

33 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

40 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0