உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

38 வருடங்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய அதிபர் ஓய்வு!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

கல்விப்புலத்தில் 38 வருட கால அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அதிபர். இராமு பத்மாவதி அரச பாடசாலை பணிகளில் இருந்து இன்னும் 3 நாட்களில் ஓய்வு பெறவுள்ளார்.

கண்டி-புசல்லாவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட இவர், மலையகக் கல்வித்துறையில் சுமார் 38 வருடங்களாக ஆசிரியராகவும், அதிபராகவும் அளப்பரிய சேவையாற்றி வந்தார்.

இதனைத் தொடர்ந்து, தனது நீண்டகால அரச பாடசாலைக் கல்விப் பணியிலிருந்து எதிர்வரும் 07.05.2026 அன்று பணி ஓய்வு பெறவுள்ளார். கடந்த 1988 ஆகஸ்ட் 29 ஆம் திகதி அன்று தனது முதல் நியமனத்தைப் பெற்றுக்கொண்ட இவர், கண்டி மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளில் பணியாற்றி மாணவர் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தம்மை அர்ப்பணித்து கொண்டவராக திகழ்கிறார்.

கண்டி – புப்புரஸ்ஸ ஸ்டெலன்பர்க் தமிழ் வித்தியாலயத்தில் தனது முதல் நியமனத்தைப் பெற்று 03 ஆண்டுகள் (1988–1992) பணியாற்றினார். நுவரெலிய- கொட்டகலை, யதன்சைட் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் 1992 முதல் 1993 வரை இரண்டு ஆண்டுகள் முறையான ஆரம்பக்கல்வி ஆசிரியர் பயிற்சியைப் பெற்றுக்கொண்டார்.


பயிற்சியின் பின்னர் புசல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் ஓராண்டு காலம் (1994–1995) பணியாற்றினார். புசல்லாவ – பிளக்பொரஸ்ட் தமிழ் வித்தியாலயத்தில் நீண்டகாலச் சேவை புரிந்தார். இதனைத் தொடர்ந்து, அதிபர். இராமு பத்மாவதி தமது சேவைக்காலத்தில் மிக நீண்ட பணியை சுமார் 25 வருடங்களாக புசல்லாவ பிளக்பொரஸ்ட் தமிழ் வித்தியாலயத்தில் தொடர்ந்துள்ளார்.

இந்த பாடசாலையில் 03 ஆண்டுகள் ஆசிரியையாகவும், இரண்டரை ஆண்டுகள் பதில் அதிபராகவும், 20 ஆண்டுகள் அதிபராகவும் கடமையாற்றி, பாடசாலையின் பௌதீக மற்றும் கல்வி ரீதியான வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தார்.


தனது சேவையின் இறுதிப் பகுதியாக புசல்லாவ ரொத்ஸ்சைல்ட் தமிழ் வித்தியாலயத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2026 மே 07 ஆம் திகதி வரை சுமார் 06 ஆண்டுகள் அதிபராகப் பணியாற்றி எதிர்வரும் 07.05.2026 தனது அரச பாடசாலை பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.

பணியில் இருந்து ஓய்வு பெறும் அதிபர். இராமு பத்மாவதியின் எதிர்கால வாழ்வு சிறக்க மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்முதலை தாக்கிப் பலி! கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்…

33 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

40 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0