உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யாழ்ப்பாணத்தில் தேங்காயொன்று 6500 ரூபாவிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
21 பார்வைகள்

யாழ்ப்பாணம் சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில், சங்கானை மாவடி ஞானவைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்விலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் வருடந்தோறும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில் கடந்த 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை போர்த் தேங்காய் அடிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது இருபதிற்கும் மேற்பட்ட தேங்காய்கள் ஏலத்தில் விடப்பட்டது. ஏல விற்பனையில் கடும் போட்டிகள் நிலவியதுடன், இதன்போது விசேடமாக தேங்காயொன்று பலரது ஏலங்களின் பின்னராக இறுதியாக குறித்த தேங்காயானது 6500 ரூபாவுக்கு விற்பனையானது.

இவ்வாறு ஏலத்தில் வாங்கப்பட்ட போர் தேங்காய்களுக்கு இடையில் மீண்டும் போர்த்தேங்காய் அடிக்கும் போட்டிகள் இடம்பெற்றது.

இதனிடையே கடந்த வருடமும் தேங்காயொன்று அதிகூடிய விற்பனையாக 5000ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்முதலை தாக்கிப் பலி! கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்…

33 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

40 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0