உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

போதைப்பொருள் மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
25 பார்வைகள்

காலி – அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலப்பிட்டிய பகுதியில் வெளிநாட்டுத் தயாரிப்பு பிஸ்டல் ரக கைத்துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அஹுங்கல்ல பொலிஸாரினால் ஞாயிற்றுக்கிழமை (03) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் பலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டுத் தயாரிப்பு பிஸ்டல் ரக கைத்துப்பாக்கி ஒன்று, அதன் மகசின் ஒன்று, 16 தோட்டாக்கள் மற்றும் 11 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த துப்பாக்கியை சில நாட்களுக்கு முன்னர் சந்தேகநபருக்கு வழங்கியதாகக் கூறப்படும் மற்றொருவர் நேற்று இரவு அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவின் வாதுவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேக நபர்கள் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருபவர்கள் என்பதும், ஏதேனும் குற்றச் செயலைச் புரிவதற்காக இவர்களுக்கு இந்தப் துப்பாக்கி வழங்கப்பட்டிருப்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் முதலை தாக்கிப் பலி!

தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர்முதலை தாக்கிப் பலி! கொழும்பு, பெல்லன்வில வாவியை அண்டிய கிளைக் கால்வாய் ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்…

4 0 0
இலங்கை செய்திகள்

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர் பலி!

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள்நேருக்கு நேர் மோதி இளைஞர் பரிதாபப் பலி! திருகோணமலை – தம்பலகாமத்தில் துயரம் திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமெந்து…

39 0 0
இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

47 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

27 0 0