கஞ்சாவை கடத்திச் சென்ற இருவர் கைது.!
ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 02ஆம் மைல்கல் பகுதியில் நேற்று சனிக்கிழமை (02) காலை கேரளா கஞ்சாவை கடத்திச் சென்ற இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தணமல்வில பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 39 வயதுடைய நபர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒக்கம்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 190 கிலோகிராம் 180 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கெப் ரக வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒக்கம்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.