உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

ஐ.ஓ.சி எரிபொருள் விலைகள் அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
24 பார்வைகள்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று சனிக்கிழமை (02) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரித்ததை அடுத்து, லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பின் கீழ் லங்கா ஓட்டோ டீசல் மற்றும் 92 ரக பெற்றோல் ஆகியவற்றின் விலைகள் மாத்திரம் திருத்தப்பட்டுள்ளன. ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் புதிய விலை 492 ரூபாய் எனவும் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 410 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.

குறித்த இரண்டு வகை எரிபொருட்களைத் தவிர, ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

46 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

26 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

43 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

48 0 0