உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வவுனியா வடக்கில் ரூ. 18 இலட்சம் பெறுமதியான வீட்டு திட்டங்கள் – பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட தவிசாளர்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
29 பார்வைகள்

வவுனியா வடக்கு பிரதேசத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய வீட்டுத்திட்டப் பணிகளை, பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு நேரில் சென்று பார்வையிட்டார்.


வாழ்வாதாரத்தில் பின்தங்கியதாக தெரிவு செய்யப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு தலா 18 இலட்சம் ரூபாய் பெறுமதியில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்திற்கு தேவையான நிதி வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளது.


வீட்டுத்திட்டப் பணிகள் அனைத்தும் வவுனியா வடக்கு பிரதேச சபையின் நேரடி கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கட்டுமானப் பணிகள் தற்போது பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வருகின்றன.

இதன் முன்னேற்றம் மற்றும் தரநிலைகளை மதிப்பீடு செய்யும் நோக்கில் தவிசாளர் கள விஜயம் மேற்கொண்டு அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கேட்டறிந்தார்.


மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், வவுனியா வடக்கு பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக இந்த வீட்டுத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

24 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0