உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

வெளிநாடுகளில் பதுங்கியுள்ளவர்களுக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்படும் – ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
36 பார்வைகள்

மஹரக பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றச்சாட்டுக்கு உள்ளான ராஜபக்ஷ குடும்ப உறுப்பினரை நாட்டுக்கு கொண்டு வர சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.


2009 ஆம் ஆண்டுக்கால சம்பவங்கள் மற்றும் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை காலத்தின் போக்கில் மறக்கடிக்க இடமளிக்க முடியாது என அவர் வலியுறுத்தினார்.முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் குறுகிய காலத்தில் பெற்ற சொத்து விபரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும், இல்லையேல் அந்த சொத்துகள் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் அரசுடமையாக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய பின்னணியில் தற்போதைய அரசாங்கமே நாட்டை பொறுப்பேற்றதாகவும், அந்த சூழலில் பொருளாதார மீட்சி குறித்து எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவிப்பது பொருத்தமற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகளின் ஒன்றுகூடல்கள் அரசாங்கத்திற்கு சவாலாக அமையாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.


அத்துடன் நிலக்கரி கொள்வனவு தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசேட ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கையின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், எந்தவொரு தரப்பையும் பாதுகாக்க தமக்கு தேவையில்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

43 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

24 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

41 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

47 0 0