செம்மணி புதைகுழி அகழ்வில் மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு.!
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் ஐந்தாம் நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) மேலும் மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அடையாளம் காணப்பட்ட அந்த எலும்புக்கூடுகளை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன்மூலம், இதுவரையான அகழ்வுப் பணிகளில் செம்மணி பகுதியில் மொத்தமாக 244 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவற்றில் 240 எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக தொடரும் இந்த அகழ்வுப் பணிகள் மூலம் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவரக்கூடும்என எதிர்பார்க்கப்படுகிறது.