உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மலையக ஊழியர் சங்க மேதினப் பேரணி..!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
23 பார்வைகள்

மலையக ஊழியர் சங்கத்தின் ஸதாபகத் தலைவர் ஜெயம் கண்ணா, விஸ்வநாதன்  தலைமையில் பொதுச் செயலாளர் கண்மணி சிவநேசனின் வழிநடத்தலில் பசறை பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது. 

தமிழர் பாரம்பரிய தப்பு வாத்தியம் முழங்க மலையக ஊழியர் சங்க மேதினப் பேரணி மடுலசீமை சந்தியில் இருந்து பசறை பிரதேச சபை மண்டபத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர் இதன் போது மூத்த முன்னோடி தொழிற்சங்கவாதிகள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கபைபடைடனர். 

சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் முன்னிலை வகிக்க வருகை தந்த அனைவரும் பின்வரும்  உறுதிப்பாட்டை சத்தியபிரமாணமாக எடுத்துக் கொண்டனர்.

“இன்று உலகத் தொழிலாளர் தினமான மே மாதம் முதலாம் திகதி, மலையகத் தொழிலாளர் வர்க்கத்தின் வீரஞ்செறிந்த போராட்ட வரலாற்றை நினைவுகூர்ந்து, [சங்கத்தின் பெயர்] ஆகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து பின்வரும் சத்தியப்பிரமாணத்தைச் செய்கின்றோம்:

1. உரிமைகளுக்காக உறுதியுடன் நிற்றல்

எமது வியர்வையினாலும் உழைப்பினாலும் இந்த நாட்டின் பொருளாதாரம் நிமிர்ந்து நிற்கின்றது என்பதை பெருமையுடன் பிரகடனப்படுத்துகிறோம். எமது நியாயமான ஊதிய உயர்வு, தொழில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் வரை நாம் சோர்வின்றித் தொடர்ந்து போராடுவோம் என உறுதி கூறுகிறோம்.

2. ஒற்றுமையே எமது பலம்

இனம், மதம், சாதி மற்றும் அரசியல் பேதங்களைக் கடந்து, தொழிலாளர்கள் என்ற ரீதியில் எமது சங்கத்தின் கீழ் ஒருமித்த கருத்துடன் செயற்படுவோம். தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையைச் சிதைக்க முற்படும் எந்தவொரு சக்திகளுக்கும் நாம் இடமளிக்க மாட்டோம் என வாக்குறுதி அளிக்கிறோம்.

3. கௌரவமான வாழ்வாதாரம்

தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் உழைக்கும் எமது மக்களுக்கு முறையான வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் காணி உரிமை ஆகியவற்றை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். எமது அடுத்த தலைமுறை ஒரு கௌரவமான சமூகமாகத் தலைநிமிர நாம் அடித்தளம் அமைப்போம்.

4. சுரண்டலுக்கு எதிரான குரல்

தொழிலாளர் சட்டங்கள் மீறப்படுவதற்கும், வேலைத்தளங்களில் நடக்கும் அநீதிகளுக்கும் எதிராக நாம் எப்போதும் ஓங்கி ஒலிக்கும் குரலாகத் திகழ்வோம். நிர்வாகத்தினதும், அரசினதும் அடக்குமுறைகளுக்கு அஞ்சாது எமது உரிமைகளை மீட்டெடுப்போம்.

5. தியாகிகளுக்கு அஞ்சலி

மலையக மண்ணில் தொழிலாளர் உரிமைகளுக்காகத் தம்முயிரைத் தியாகம் செய்த எமது முன்னோர்களின் கனவுகளை நனவாக்க, அவர்களின் போராட்ட வழியில் நின்று சங்கத்தின் இலக்குகளை வென்றெடுப்போம் என இப்புனிதமான மே தினத்தில் உறுதி ஏற்கின்றோம்.

உறுதி எடுத்தலைத் தொடர்ந்து நிர்வாகசபை உறுப்பினர்களின் உரைகளும் இடையிடையே கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

ஜெயம்,சுந்தரேசன், கருப்பையா ,  ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்மணி சிவநேசனின் உரை ஊவா மாகாண, பதுளை மாவட்ட, பசறை பிரதேசம் என மாகாண மட்டத்தில் இருந்து பிரதேச சபை வரை மலையகத் தமிழர்களுக்கும் , தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஏற்படக்கூடிய பிரச்சினைகள், சவால்கள் குறித்து எடுத்துரைப்பதாக அமைந்தது. கூடவே மலையக இளைஞர்களை ஏமாற்றும் தலைமைகளுக்கு மாற்றாக தாமே இப்போது தலைமை ஏற்று செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்ட மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா ‘ நில உரிமையே நிஜ உரிமை’ எனும் தொனிப் பொருளை அடியொற்றி ” கூலியா? காணியா?”  எனும் தலைப்பில் உரையாற்றினார். 

கடந்த 200 ஆண்டுகளாக கூலி களாகவே மலையகத் தோட்டத் தொழிலாளர்களை வைக்க நினைக்கும் இலங்கை அரசும் அதிகார வர்க்கமும் கூலி உயர்வு கொடுக்கிறோம் எனும் பெயரில்  தொடர்ந்து அடிமையாக வைக்கவே எண்ணுகின்றனர். நாம் புதிய கிராமங்களை உருவாக்க அதிகார சபை உருவாக்கினால் அதனை கலைக்கவே முயற்சிக்கின்றனர்.

பிரதேச செயலகங்களை உருவாக்கினால் அதனை அபகரிக்க முயற்சிக்கின்றனர். இப்போதைய அரசாங்கத்துக்கு இரண்டு பொறுப்புகள் உண்டு முழு நாட்டையும் ‘வளமான நாடு அழகான வாழ்க்கையை அமைப்பது’ அவர்களுடைய 2024 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதி. ஆனால் 2023 ஆம் ஆண்டே மலையக மக்களுக்கு என ஹட்டன் பிரகடனத்தை வெளியிட்டு அதன்படி 5 பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.அதில் மலையக மக்களின் காணிரஸ உரிமை, நிர்வாக உரிமை உறுதி செய்யப்படும் என கூறியுள்ளார்கள்.

இப்போது 1750/= நாட்கூலியை மாத்திரம் கொடுத்துவிட்டு காணி, பொது நிர்வாக, அதிகார சபை உரிமைகளை மழுங்கடிக்க பார்க்கின்றனர்.   எனவே நாட்டை வளமாக்க முயற்சிப்பது போலவே மலையக மக்களின் காணி உரிமை உள்ளிட்ட பிற அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட முன் வர வேண்டும் . அல்லாதவிடத்து இந்த அரசாங்கத்துக்கு நாங்கள் பலத்த எதிர்ப்பை தெரிவிக்க நேரிடும்.

எனவே கூலி அடையாளத்தை  விட்டெறிந்து கெளரவமான மக்களாக வாழ காணி உரிமையை நிலைநாட்ட உழைபைபோம். தென்பகுதி சிங்கள மக்களை போல மலையகத் தமிழ் மக்களையும் சிறு தோட்ட உடமையாக்கு என உரத்துச் சொல்வோம்.

இதன் மூலம் அடிமைக்கூலி முறை துரைத்தன  அடக்குமுறை தோட்ட நிர்வாக முறை அனைத்தில் இருந்தும் வெளியே வர முடியும். அதே நேரம் அர்த்தமுள்ள பிரஜைகளாக வாழ முடியும் எனவும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

41 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

23 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0