உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பலாலி மீனவரை இந்திய மீனவர்கள் கைது செய்த விவகாரம் மாறுபட்ட கருத்தில் மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர்……!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
22 பார்வைகள்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் பலாலியை சேர்ந்த மீனவர் ஒருவர் இந்தியா கடல் எல்லைக்குள் அத்துமீறி வந்ததாக இந்திய மீனவர்களால் கைது செய்யப்பட்டு தாக்க பட்ட விவகாரம் அண்மையில் பேசு பொருளாக இருந்தது 

அதன் தொடர்ச்சியாக இன்றய தினம் கைது செய்யப்பட்ட மீனவரின் குடும்பத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் 

தம்மை திட்டம் இட்டே கடல் கொள்ளையர் என கைது செய்ததாகவும் தாம் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது இல்லை எனவும் மற்றும் சில நாட்களுக்கு முன்னர் எம்மை பற்றி கடல் தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் என அடையாள படுத்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நபர்கள் தம்மில் உள்ள தனிப்பட்ட பகை நோக்கின் அடிப்படையிலே அவ்வாறு தெரிவித்ததாகவும் 

அச் சம்பவம் தொடர்பாக பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் பலாலி பொலிசார் தமது விருப்பம் இன்றி முறைப்பாடுகளை தள்ளு படி செய்துள்ளனர் எனவும் கூறியுள்ளனர் 

மற்றும் இந்த அவமானம் காரணமாக தமது பிள்ளைகள் பாடசாலை மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக வெளி இடம் செல்ல மறுப்பு தெரிவிப்பதாகவும் இதனால் தாம் பல சமூக பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர் 

தொடர்ச்சியாக இவ் கைது நடவடிக்கை தொடர்பாக இன்றைய தினம் பலாலி கடல் தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது 

அதன் தொடர்ச்சியாக சங்க உறுப்பினர்களிடம் இருந்து சிலர் இவ் கைது நடவடிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் 

இந்திய மீனவர்களால் கைது செய்யப்பட்டு தாக்க பட்ட நபர்கள் தமது மக்களுக்கு கடல் தொழிலுக்கு போன போது இந்திய மீனவர்களை கண்டு சாப்பாடு கேட்க போனதாகவும் அப்போது அவர்கள் கைது செய்து தாக்க பட்டதாகவும் கூறும் தகவல் போலியானது 

மற்றும் 2016 ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் மீள குடி பெயந்த பின்னிருந்து இவ் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது மற்றும் இவை சம்பந்தமாக பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடு கள் செய்யப்பட்டு உள்ளதாகவும் 

இவ் குறிப்பிட்ட குழுவினர் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் செய்து வருவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட பட்ட நபர்கள் குறித்த களவு செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த போது கடல் தொழிலாளர் சங்கத்தினர் இவர்களை கையுடன் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவமும் பதிவாகியுள்ளது 

இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் தகுந்த நடவெடிக்கை எடுக்காத காரணத்தால்தான் இவ்வாறான குற்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் ,

தற்போது அவர்கள் தூண்டில் எனும் கடல் தொழிலுக்கு சென்றதாக கூறுகின்றனர் ஆனால் அவர்கள் குறித்த தொழிலுக்கு சென்றததுக்கு எந்த ஆதாரமும் தப்பி வந்த மீனவர்களின் படகில் இல்லை என்றும் எமது மக்களுக்கும் அவர்களுக்கும் எந்த தனிப்பட்ட பகையும் இல்லை எனவும் கூறியுள்ளனர் 

மற்றும் அவர்கள் இவ்வாறான குற்ற செயல்களில் ஈடுபடுவதால் தான் அவர்களை ஊர் மக்கள் ஒதுக்கி வைத்து உள்ளனர்  அதற்காகத்தான் நாம் அனைவரும் ஒன்று கூடி ஒரு முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றங்கள் எம்மிடம் இருந்தே உருவாக வேண்டும்!

மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை அல்லது மற்றவர்களிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்ப்பதை விடுத்து மாற்றங்கள் எங்களுக்குள் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்…

41 0 0
இலங்கை செய்திகள்

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் மீண்டும் போராட்டம் தொடரும்!

எமக்கான உரிமைகள் கிடைக்காத பட்சத்தில் நாம் மீண்டும் தொடர்ச்சியாக இந்த அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டங்களையும், எதிர்ப்பு போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என ஒருங்கிணைந்த அபிவிருத்தி…

23 0 0
இலங்கை செய்திகள்

நெல்லியடியில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நள்ளிரவில் மதுபோதையில் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்…

40 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் : சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்தால் அதற்கு அரசு தயார்!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் குறிப்பிட முடியாது எனவும், உயர்நீதிமன்றமே அந்தத் தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்…

46 0 0