“உருட்டு பிரட்டு திருட்டு” என்ற தொனிப்பொருளில் சஜித் அணியின் மே தின நிகழ்வு.!
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமையில், அக்கட்சியின் 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மே தினக் கூட்டம் நாளை கொழும்பு மாளிகாவத்தையில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு:-
- இடம்: பீ.டி.சிரிசேன விளையாட்டு மைதானம், மாளிகாவத்தை, கொழும்பு.
- நேரம்: நாளை (மே 01) பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பம்.
விசேட அம்சம்: இந்த முறை மே தின நிகழ்வுகளில் பேரணிகள் எவையும் இடம்பெறாது, பொதுக் கூட்டம் மாத்திரம் நடைபெறும்.
தொனிப்பொருள்: “உருட்டு பிரட்டு திருட்டு” எனும் விசேட தொனிப்பொருளில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மே தினக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்துள்ள பல தொழிற்சங்கங்கள் பங்கேற்கவுள்ளன. அத்துடன், பொதுமக்களின் நலன் கருதி இந்நிகழ்வு சஜித் பிரேமதாஸவின் உத்தியோகபூர்வ முகநூல், வலையொளி மற்றும் ஏனைய சமூக ஊடகத் தளங்கள் ஊடாக நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது.
நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில், தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி இந்த மாபெரும் மே தினக் கூட்டம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.