மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு.!
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் பணிபுரியும் அனைத்து உத்தியோகத்தர்களும் இன்று 30 ஆம் திகதி காலை 8 மணி முதல் நீதி கோரி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக வைத்தியசாலைக்கு வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
அத்துடன் வெளிநோயாளர் பிரிவை தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளும் இடம்பெற்று வருகின்றன.
கடந்த 28 ஆம் திகதி முதல் குறித்த வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரை நோயாளர்கள் பார்வை இடும் நேரம் முடிந்த பின்னர் ஒருவர் வைத்தியசாலையில் உள்ள சிகிச்சை அறையில் வைத்து சண்டை இட்டு கொண்டிருந்த வேளை வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர் நோயாளிகளை பார்க்கும் நேரம் முடிந்த நிலையில் வைத்தியசாலையில் தகாத முறையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று கூறியதை தொடர்ந்து அந்த பெண் ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முற்பட்டுள்ளமை குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்த போதிலும் இதுவரை சம்பந்தப்பட்ட சந்தேகநபரை கைது செய்யாத காரணத்தால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளபடுகின்றது.

