உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

அமைச்சரின் இராஜினாமா வரவேற்கத்தக்கது – எம்.ஏ. சுமந்திரன் சாடல்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
31 பார்வைகள்

அமைச்சரின் இந்த இராஜினாமா முடிவை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வரவேற்றுள்ளார்.

எனினும், தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதை நிர்வாகமே ஒப்புக்கொண்ட பின்னரும், நாடாளுமன்றத்தில் அரசாங்கமும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரைப் பாதுகாத்துப் பதவியில் தக்கவைக்க வாக்களித்தமை ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தவறிழைத்ததாகக் கருதப்படும் ஒருவரைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகளை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

நிலக்கரி கொள்வனவு ஊழல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில், அமைச்சரின் இந்த இராஜினாமா அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என ஏனைய எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தவை எனத் தெரியவந்ததையடுத்து ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து, வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி நேற்று 17 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்குச் சுயாதீனமாக ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

24 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

46 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

72 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

65 0 0