பொடி பெட்டியை கொ*லை செய்ய முயன்ற சந்தேகநபர் கைது.!
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘லொகு பெட்டி’ என்பவரின் சகோதரரான ‘பொடி பெட்டி’ என்பவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற சந்தேகநபர் ஒருவர், அஹுங்கல்ல பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொஸ்கொட, பிடிகொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அஹுங்கல்ல, லோகன்வத்த மயானத்திற்கு அருகில் வியாழக்கிழமை (16) முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த ‘பொடி பெட்டி’ என்பவரை சந்தேகநபர் T-56 ரகத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இது தொடர்பாக அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வெள்ளிக்கிழமை (17) இரவு கொஸ்கொட, ஹேகல்ல பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மறைந்திருந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 13 கிராம் 760 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.