உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

அதிக விலைக்கு பொருட்களை விற்றால் முறையிட விசேட தொலைபேசி இலக்கம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
41 பார்வைகள்

பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் அல்லது மோசடிகள் குறித்து பொதுமக்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற துரித இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.

புத்தாண்டு காலப்பகுதியில் நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுப்பதற்கு, வார இறுதி நாட்களிலும் முற்றுகைகளை முன்னெடுக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை தீர்மானித்துள்ளது என பதில் பணிப்பாளர் சமந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி, வார இறுதி நாட்களிலும் சந்தை விலைகளை கண்காணிப்பதற்கு, விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்புகளுக்காக 350 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள், பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றதா என்பதைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாடு முழுவதும் சுமார் 06 ஆயிரம் முற்றுகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

58 0 0
இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

92 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

52 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

45 0 0