எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அடாவடி.!
இன்று காலை வேளையில் முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் நிரப்ப சென்ற வேளை Qr இருந்தால் மட்டுமே பெற்றோல் வழங்கப்படும் என்று அங்கு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர் தெரிவித்துள்ளார் என முச்சக்கரவண்டி சாரதிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
காலை வேளை அதிகளவு முச்சக்கரவண்டிகள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான எரிபொருளை தங்களுக்கு வழங்கப்பட்ட Qrஐ காட்டி பெற்றுவந்தனர்.
அரசாங்கம் நேற்று இரவு 12 மணி முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை பெற்றோல் வாகனங்களுக்கு Qr கட்டுபாடு இல்லை என்று ஊடகங்களில் அறிவித்த போதிலும் மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மட்டுமே இவ்வாறான செயலை செய்து வருகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உடன் கவனம் செலுத்த வேண்டும்.
இந்நிலை குறித்த விடயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச் செல்வியிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.