உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் வெலிசறை புதிய சிறைச்சாலைக்கு இடமாற்றம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த 07 முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், வெலிசறையில் உள்ள புதிய சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை (11) இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டவர்களாக வெலே சுதா, தெமட்டகொடை சமிந்த, லொக்கு பெட்டி, மிதிகம ருவன், பெக்கோ சமன், ஆர்மி சம்பத், மன்னா ரமேஷ் ஆகியோர் அடங்குவர்.

பூஸா சிறைச்சாலையிலிருந்தவாறே இவர்கள் பல்வேறு கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், அவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெலிசறை கடற்படை முகாம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய சிறைச்சாலையானது, நவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய ஒரு விசேட தடுப்பு மையமாகும். இந்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும் முதலாவது கைதிகள் குழு இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

49 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

42 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

60 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

63 0 0