உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

யாழில் தங்கையின் தங்க மோதிரத்தை விற்று காதலிக்கு ஐபோன் பரிசளித்த அண்ணன்!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

யாழில் தங்கையின் தங்க மோதிரத்தை களவெடுத்து விற்று, அண்ணன் காதலிக்கு ஐபோன் பரிசளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

யாழ் நகர் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த 16 வயதான மாணவைன் , தங்கைக்கு அண்மையில் பூப்புனித நீராட்டுவிழா இடம்பெற்றதாகவும், இதன் போது உறவினர் ஒருவரால் தங்கைக்கு தங்க மோதிரம் அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் அன்றையதினமே தங்கையின் தங்கம் மோதிரம் மாயமானதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கடந்த தினங்களில் சிலர் மாணவன் விட்டு சென்று அவர் தொடர்பில் விசாரணை செய்ததாக கூறப்படுகின்றது.
அதன்போது மாணவனின் பெற்றோர், மகனை தேடுவதற்கான காரணம் கேட்ட போது தமது உறவினரான மாணவிக்கு மாணவனால் வாங்கிக் கொடுக்கப்பட்ட மிகப் பெறுமதியான ஐபோன் தொடர்பாகவும் அந்த ஐபோனில் காணப்பட்ட மாணவனின் புகைப்படங்கள் தொடர்பாகவும் தெரியபடுத்தப்பட்டுள்ளது.

ஐபோன் வாங்கிய மாணவியும், மாணவனும் ஒரே தனியார் கல்வி நிலையத்தில் கற்று வந்த நிலையில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இதனையடுத்து விளையாட்டு மைதானத்தில் நின்றிருந்த மாணவனை குடும்பத்தினர் அழை்த்து வந்து வந்து விசாரணை செய்த போதே தங்கையின் மோதிரத்தை விற்று தனது காதலிக்கு ஐபோன் வாங்கிக் கொடுத்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

16 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

50 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

61 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

54 0 0