உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
19 பார்வைகள்

மாலைத்தீவு ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் துறை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு (Mohamed Muizzu) அடுத்த மாதம் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான மாலைத்தீவு உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இரு நாடுகளின் கடற்றொழில் துறைகளிலும் ஏற்படுத்தக்கூடிய புதிய முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, மாலைத்தீவின் மீன் வளங்களையும், இலங்கையின் வளர்ச்சியடைந்த தகரத்திலடைக்கப்பட்ட மீன் (Canned Fish) கைத்தொழில் தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைத்து புதிய உற்பத்திகளைச் சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்து அமைச்சர் யோசனை முன்வைத்தார்.

தற்போது “Made in Sri Lanka” முத்திரையுடன் கூடிய இலங்கையின் கடல்சார் உற்பத்திகள் துபாய் ஊடாகவே மாலைத்தீவுச் சந்தையைச் சென்றடைகின்றன.

இந்த நிலையை மாற்றி, இடைத்தரகர்கள் இன்றி இலங்கையிலிருந்து நேரடியாக மாலைத்தீவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான புதிய பொறிமுறையொன்றை வகுக்க இரு தரப்பும் உடன்பட்டுள்ளன.

மாலைத்தீவுச் சந்தையை இலக்காகக் கொண்டு இலங்கையில் மீன் பதப்படுத்துதல் (Processing) மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட மீன் உற்பத்திகளைத் தயாரிப்பதன் மூலம் இரு நாடுகளுக்கும் பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதன்போது வலியுறுத்தினார்.

இந்த வர்த்தக மற்றும் இராஜதந்திர நகர்வு, எதிர்வரும் மாலைத்தீவு ஜனாதிபதியின் விஜயத்தின் போது உத்தியோகபூர்வ ஒப்பந்தங்களாக மலரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

13 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

50 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

61 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

54 0 0