உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக தெரிவில் இழுபறி: பிரதேச செயலகம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்..!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக, வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக தெரிவின் போது, சந்தா பணம் செலுத்துவது தொடர்பாக உறுப்பினர்களிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

இதனைத் தவிர்க்கும் பொருட்டு, 2026-ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவை மிகவும் முறைப்படி நடாத்தத் தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக, கடந்த ஜனவரி 15 முதல் பிப்ரவரி 15 வரை புதிய உறுப்பினர்கள் இணைவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டு, பகிரங்க அறிவித்தல் விடுக்கப்பட்டது.

இந்த அறிவித்தலின் அடிப்படையில், 93 புதிய உறுப்பினர்கள் உரிய சந்தா பணத்தைச் செலுத்தி வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, புதிய நிர்வாகத்தைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் மார்ச் 06-ஆம் திகதி நடைபெறும் என கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நிர்வாக தெரிவு குறித்த அறிவிப்பு வெளியான சில மணிநேரத்திலேயே, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தொலைபேசி வாயிலாக மற்றுமொரு அறிவிப்பை வழங்கினார்.

சங்க யாப்பின்படி, புதிய உறுப்பினர்கள் இணைந்து மூன்று மாதங்கள் கடந்த பின்னரே நிர்வாக தெரிவு இடம்பெற முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, மேலும் 42 பேர் புதிதாகச் சந்தா பணம் செலுத்தி சங்கத்தில் இணையத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த போதிலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்துவிட்டதால் அவர்களை இணைக்க முடியாது என தற்போதைய நிர்வாக உறுப்பினர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

முறையான அறிவித்தல் வழங்கப்பட்டு, உறுப்பினர்கள் இணைக்கப்பட்ட பின்னரும் நிர்வாக தெரிவைத் தாமதப்படுத்துவது சங்கத்தின் செயல்பாடுகளைப் பாதிக்கும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

திட்டமிட்டபடி ஜனநாயக ரீதியில் புதிய நிர்வாகத்தைத் தெரிவு செய்ய அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்.!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச நீதிக்கான ஈழத் தமிழ்…

52 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி.!

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று…

51 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த மாதம் இலங்கைக்கு வருகின்றது ஐ.எம்.எவ். குழு.!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, சர்வதேச…

59 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நாம் நிறைவேற்றியே தீருவோம்.!

இலங்கையில் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் அரசு நிச்சயமாக நிறைவேற்றும் என்றும், யார்…

52 0 0