உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை; பெண் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

மட்டக்களப்பு – கல்லடியில் நீண்ட காலமாக இயங்கிய கசிப்பு விற்பனை நிலையத்தை நேற்றையதினம்(8) பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதுடன் பெண் ஒருவரையும் கைது செய்துள்னனர்.

இதன்போது, பெண்ணிடமிருந்து 105 போத்தல் கசிப்புடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் நேற்று பகல் கல்லடி வேலூர் 4ஆம் குறுக்கு வீதியில் உள்ள வீட்டை முற்றுகையிட்ட போதே பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு, குறித்த பெண் வீட்டினை சுற்றி உயரமாக மதில் அமைத்து சிசிரி கமராக்களை பொருத்தி நீண்டகாலமாக கசிப்பு வியாபரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் பொலிஸார் வீட்டை முற்றுகையிடும் போது சிசிரி கமராவில் பார்த்து கொண்டதும் வீட்டின் கதவை மூடி வீட்டில் யாரும் இல்லாததுபோல வீட்டுக்குள் இருந்து கொண்டு பொலிஸார் போன பின்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்தப் பெண்ணுக்கு எதிராக பொதுக்கள் பொலிஸாரிடம் பல முறைப்பாடுகள் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

23 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0