உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஐ.எம்.எவ். தாளத்துக்கு ஆடாதீர்கள்; உள்நாட்டுத் தொழில்துறையைப் பாதுகாத்திடுங்கள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
20 பார்வைகள்

“சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணியாமல், நாட்டின் தொழிற்சாலைகளையும் உள்நாட்டுத் தொழில் முயற்சிகளையும் பாதுகாப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை அரசு முன்னெடுக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52 சதவீதப் பங்களிப்பை வழங்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் முதல் தற்போதைய மத்திய கிழக்கு நெருக்கடி வரை தொடர்ச்சியான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், ஐ.எம்.எவ். நிபந்தனைக்கமைய ‘செஸ்’ வரியை நீக்க அரசு எடுக்கும் முயற்சியானது உள்நாட்டுத் தொழில்துறையின் பாதுகாப்பை முழுமையாகச் சீர்குலைக்கும்.

பராட்டே சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், கடன் சுமையில் சிக்கியுள்ள தொழில்முனைவோருக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் அவர்களுக்கான கடன் மறுசீரமைப்பு கூடச் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் இத்துறையினர் பாரிய இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஏற்றுமதித் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, இந்தியாவின் ஆந்திரா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. குறிப்பாக, பிரண்டிக்ஸ், மாஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இந்தியாவிற்கு நகர்வதால், இலங்கையில் பல இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்றுமதித் துறையை வலுப்படுத்தவும், உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச நிதியத்தின் சொற்கேட்டுச் செயல்படுவதை விடுத்து, எமது நாட்டின் தொழிற்சாலைகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க முன்வர வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

23 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0