உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு 100 பில்லியன் ரூபா நிவாரணப் பொதி! – எரிபொருள், உரம், அஸ்வெசும கொடுப்பனவுகள் அதிகரிப்பு..!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
20 பார்வைகள்

“மத்திய கிழக்கு யுத்த நெருக்கடியால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கங்களைக் கருத்திற்கொண்டு, 100 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புதிய விசேட நிவாரணப் பொதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

இன்று நண்பகல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே, அடுத்த மூன்று மாதங்களுக்காகத் திட்டமிடப்பட்டுள்ள இந்த விசேட சலுகைகளை அவர் உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.

நிவாரணப் பொதியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

எரிபொருள் விலைச் சலுகை

மே முதலாம் திகதி கணக்கிடப்படும் உண்மையான செலவின் அடிப்படையில், டீசல் லீற்றர் ஒன்றுக்கு 100 ரூபாவும், பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு 20 ரூபாவும் மானியமாக வழங்கப்படும்.

இதற்காக அரசாங்கம் மாதம் 20 பில்லியன் வீதம், மூன்று மாதங்களுக்கு 60 பில்லியன் ரூபாவைச் செலவிடவுள்ளது.

சுப்பர் டீசல் மற்றும் சுப்பர் பெற்றோல் ஆகியவை தற்போதைய சந்தை விலையிலேயே விற்பனை செய்யப்படும்.

மீனவர்களுக்கான நிவாரணம்

ஒருநாள் படகுகளுக்கு: லீற்றர் ஒன்றுக்கு 50 ரூபா வீதம், மாதத்துக்கு 25 நாள்களுக்கு (நாளொன்றுக்கு அதிகபட்சம் 25 லீற்றர்) மூன்று மாத காலத்துக்கு எரிபொருள் மானியம் வழங்கப்படும்.

ஆழ்கடல் பல்தினப் படகுகளுக்கு: ஒருமுறை மட்டும் வழங்கப்படும் விசேட கொடுப்பனவாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வழங்கப்படும்.

விவசாயிகளுக்கான உர மானியம்

நெற்செய்கைக்காக வழங்கப்பட்டு வந்த 25 ஆயிரம் ரூபா உர மானியம், தற்போது 30 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மேலதிகப் பயிர்ச்செய்கைகளுக்கான மானியம் 15 ஆயிரம் ரூபாவிலிருந்து 18 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி
கொடுப்பனவுகள்

ஏப்ரல் மாதத்துக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவுகள் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டுள்ளன.

  • 17,500 ரூபா கொடுப்பனவு 25,000 ரூபாவாக உயர்வு.
  • 10,000 ரூபா கொடுப்பனவு 15,000 ரூபாவாக உயர்வு.
  • 5,000 ரூபா கொடுப்பனவு 7,500 ரூபாவாக உயர்வு.

எதிர்காலத் திட்டம்

இந்த நிவாரணப் பொதியானது அடுத்த மூன்று மாதங்களை இலக்காகக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, இதற்கடுத்த கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

66 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

86 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

88 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

87 0 0