உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து சேவை ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
18 பார்வைகள்

இயற்கை காட்சிகளை ரசிக்க ஏதுவாக அமைக்கப்பட்ட சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஹட்டன் SLTB பணிமனையால் வடிவமைக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் கூட்டுத்தாபனத்தின் சஃபாரி பேருந்து, இன்று (06) சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

ஹட்டன் SLTB பணிமனையின் பொறியியல் பிரிவால் வடிவமைக்கப்பட்ட சஃபாரி பேருந்து, நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுலா சுரவீர ஆராச்சி மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோரின் பங்கேற்புடன் சமய வழிப்பாட்டுடன் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் குறித்த பேருந்து சேவையை ஆரம்பித்தது.

இரத்தமலான பணிமனையில் சேவையிலிருந்து நீக்கப்பட்டிருந்த இந்தப் பழைய பேருந்து ஹட்டன் பணிமனைக்குக் கொண்டுவரப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடனும் 42 இருக்கைகளுடன் ரூ. 4 மில்லியன் செலவில் இந்தப் பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் மேல் கூரையுடனும், வறண்ட காலத்தில் கூரையின்றியும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சஃபாரி பேருந்தில், ஒலி அமைப்பு, கவர்ச்சிகரமான மின்விளக்குகள் மற்றும் பல நவீன டிஜிட்டல் துணைக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த SLTB சஃபாரி பேருந்தை நுவரெலியா மாவட்டத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ எந்தப் பயணத்திற்கும் SLTB கட்டணத்தில் முன்பதிவு செய்யலாம் என பணிமனை மேலாளர் திரு. பாலித வீரசூரிய இதன்போது தெரிவித்தார்.

இந்தப் பேருந்திற்குத் தனி ஓட்டுநர் மற்றும் நடத்துநர் நியமிக்கப்பட்டுள்ளதோடு, சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடும் ஹட்டன் ரயில் நிலையத்திலிருந்து நல்லத்தண்ணி வரையிலான 2026-2027 ஆம் ஆண்டு ஸ்ரீ பாத மலை யாத்திரையில் இந்தப் பேருந்தையும் சேர்க்க பணிமனை நிர்வாக அதிகாரம் திட்டமிட்டுள்ளது.

சஃபாரி பேருந்து திறப்பு விழாவில் ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர, நுவரெலியா மாவட்ட SLTB பிரதம மேலாளர் ஆர்.எம்.ஆர்.ஜே.பி. தசநாயக்க மற்றும் ஹட்டன் SLTB பணிமனையின் பல ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0