உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மை விரைவில் வெளிவரும் – ரில்வின் சில்வா தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான உண்மை விரைவில் வெளிவரும் என்பதால் மக்கள் கலக்கமடையத் தேவையில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.வவுனியாவில் நடைபெற்ற 55ஆவது ஏப்ரல் வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய அவர், குறித்த தாக்குதல் தொடர்பாக முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.


மேலும், ‘பிரதான சூத்திரதாரி யார்?’ என்ற கேள்வியை முன்வைத்து சிலர் நூல் வெளியிடும் நிலையில், உண்மைகள் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.அத்துடன், நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் உலகளாவிய நெருக்கடி நிலைகளை சமாளிக்க அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், மக்கள் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


எதிர்க்கட்சிகள் முன்வைக்கும்குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தை பலவீனப்படுத்தாது என்றும், அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து நாட்டின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என்றும் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

87 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0