உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சமையல் எரிவாயு விலைகள் சடுதியாக உயர்வு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
25 பார்வைகள்

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.அதன்படி, 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு கொள்கலன் 775 ரூபாவால் அதிகரித்து 4,765 ரூபாவாக உயர்ந்துள்ளது.

5 கிலோ கொள்கலன் 308 ரூபாவால் அதிகரித்து 1,910 ரூபாவாகவும், 2.3 கிலோ கொள்கலன் 140 ரூபாவால் அதிகரித்து 890 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, லாஃப்ஸ் நிறுவனமும் விலைகளை அதிகரித்துள்ளதுடன், 12.5 கிலோ கொள்கலன் 1,070 ரூபாவால் உயர்ந்து 5,700 ரூபாவாகவும், 5 கிலோ கொள்கலன் 418 ரூபாவால் அதிகரித்து 2,280 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடியுடன் போராடி வரும் பொதுமக்களுக்கு இந்த விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஹோட்டல் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களும் உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0