உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நிலக்கரி மோசடி: அமைச்சரவை முழுவதும் சிறைக்கு செல்லும் அபாயம் – சானக எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ஊழல்வாதிகளைப் பாதுகாத்து வருகின்றனர் என்றும், நிலக்கரி கொள்வனவு மோசடி காரணமாக எதிர்காலத்தில் முழு அமைச்சரவைக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.


தரம் குறைந்த நிலக்கரி விதிமுறைகளை மீறி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய நிறுவனத்திற்கு முறைகேடாக விலைமனு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த தரமற்ற நிலக்கரியால் மின்சார உற்பத்தியில் பாரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும், அமைச்சர்கள் தவறுகளை அறிந்தே செய்கிறார்களாஅல்லது அறியாமல் செய்கிறார்களா என்பது தெளிவில்லை என்றும், எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டிய பிழைகளை மறைமுகமாகச் சரிசெய்து வெளியில் விமர்சனம் செய்வதாகவும் அவர் கூறினார்.


முறையற்ற கொள்வனவுகள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பில் எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், தற்போதைய நிர்வாகத்தின் செயல்பாடுகள் காரணமாக அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும் என்றும் சானக எச்சரித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0