உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

போதைப்பொருள் ஒழிப்பு சோதனையில் 906 பேர் கைது!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

நாடு முழுவதும் நேற்று ஏப்ரல் 4 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட “ முழு நாடும் ஒன்றாக ” தேசிய செயற் திட்டத்தின் கீழ், போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு நடந்த விசேட நடவடிக்கைகளில் மொத்தம் 906 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையின் படி,

சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைகள் 12 நபர்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மேலும், தடுப்பு ஆணையின் கீழ் 15 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதேவேளை, குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது 592 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், குற்றச் செயல்களில் நேரடியாக தொடர்புடைய 4 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மேலும், 229 தேடப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் 121 திறந்த பிடியாணைகள் கொண்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.போக்குவரத்து சட்டங்களை மீறியவர்களுக்கும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்திய 142 பேர் மற்றும் அபாயகரமாக வாகனம் செலுத்திய 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலதிகமாக பல்வேறு போக்குவரத்து குற்றச்செயல்களுக்கு 4,486 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

86 0 0