இந்திய பிரதி உயர்ஸ்தானிகருக்கும் கிழக்கு ஆளுனருக்குமிடையில் சந்திப்பு!
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் டாக்டர் சத்யஞ்சல் பாண்டே, கிழக்கு மாகாணத்திற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணத்தின் போது, பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவை திருகோணமலையில் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்.இந்தச் சந்திப்பின் போது, இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், அந்தத் திட்டங்கள் மூலம் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களுக்கும் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.திருகோணமலை மாவட்டத்தை எரிசக்தி மையமாக மேம்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை சமாளிக்கும் நடவடிக்கைகளிலும் ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும்வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்த எதிர்காலத்தில் பல்வேறு பெரிய அளவிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவும் ஒத்துழைப்பும் மேலும் வலுப்பெற இந்தச் சந்திப்பு முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.