மருத்துவர்களின் தொழிற்சங்க போராட்டம்: மன்னார் வைத்தியசாலையில் நோயாளர்கள் அவதி.!
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியர்கள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க போராட்டம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.இன்றைய தினம் (4) நடைபெற்ற இந்த போராட்டத்தில் மன்னார் மாவட்ட வைத்தியர்களும் இணைந்ததால், அவர்கள் கடமையில் ஈடுபடாத நிலை ஏற்பட்டது.
இதன் விளைவாக, மருந்து வழங்கல் மற்றும் ஊசி செலுத்துதல் போன்ற குறைந்தளவிலான சேவைகள் மட்டுமே இடம்பெற்றதுடன், அவசர நோயாளிகளை அனுமதிக்கும் நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.மற்றைய அனைத்து மருத்துவ சேவைகளும் இடம்பெறாத காரணத்தால், சிகிச்சைக்காக வந்த பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
தூர இடங்களில் இருந்து வந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டதுடன், வைத்தியர்களின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.