உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

25,000 மெட்ரிக் தொன் உரத்துடன் நாளை இலங்கை வரும் கப்பல்!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

நாட்டில் உரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக 25,000 மெட்ரிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பல் ஒன்று நாளை (05) நாட்டை வந்தடையும் என கமத்தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதி அமைச்சர் நமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.உலகளாவிய சூழ்நிலையால் உருவாகியுள்ள உரச் சவால்களை அரசாங்கம் வெற்றிகரமாக சமாளிக்கும் திறன் கொண்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.


பெரும்போகத்தின் ஆரம்பத்தில் விவசாயிகளிடையே உரம் குறித்த கவலைகள் இருந்தபோதிலும், நாட்டில் தேவையை விட அதிகமாக பொட்டாஷ் முரியேட் மற்றும் டிரிபிள் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


யூரியா உரத்தில் சிறிய சிக்கல் இருக்கக்கூடும் என்றாலும், நெல் சாகுபடிக்குத் தேவையான அளவை விட அதிகமான கையிருப்பு தற்போது இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும், உப பயிர்கள் மற்றும் கூடுதல் பயிர்ச்செய்கைகளுக்கான தேவையை கருத்தில் கொண்டு, மேலதிக உரக் கப்பல்களை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளும் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

84 0 0