உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சூத்திரதாரியை வெளிப்படுத்தாவிட்டால் நடவடிக்கை – சானக பண்டார எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்த வேண்டும் என்றும், தவறினால் விசாரணைகளை முன்னெடுக்கும் ஷானி அபேசேகர பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் அமைப்பின் பிரதான செயலாளர் சானக பண்டார தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், கடந்த ஆண்டு தாக்குதலின் சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும், இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மீது நம்பிக்கை இல்லை என்றும், உண்மையான சூத்திரதாரி குறித்து அரசாங்கம் தெளிவான பதிலை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியது அவசியம் என்றும் சானக பண்டார குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

63 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

67 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

86 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

84 0 0