இலங்கையிலுள்ள முஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு புனர்வாழ் வளிக்காவிடின் மீண்டும் குண்டு வெடிக்கும் ! கம்மன்பில எச்சரிக்கை.!
இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கையுடையவர்களுக்கு முறையான புனர்வாழ்வு வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் நாட்டில் மீண்டும் குண்டு வெடிப்புகள் நிகழும் அபாயம் உள்ளது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.கொழும்பில் அமைந்துள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த எந்த அரசும் அடிப்படைவாதக் கொள்கையுடையவர்களுக்கு சரியான புனர்வாழ்வு வழங்கவில்லை என்றும், பிரதான சூத்திரதாரியைத் தேடுவதிலேயே காலம் கழிக்கப்படுகின்றது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
யுத்தத்திற்குப் பிறகு ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டதால்தான் நாட்டில்நாட்டில் தாக்குதல்கள் இடம்பெறாமல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களுக்கு சரியான புனர்வாழ்வு வழங்கி சமூகத்தில் இணைப்பது தேசிய பாதுகாப்பிற்குத் தேவையானது என்றும், இல்லையெனில் நாடு மீண்டும் பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.