தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல்.!
அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் நாவிதன்வெளி பகுதியில் நேற்று திங்கட்கிழமை (30) மாலை நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கட்சி உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், தவிசாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட ரீதியிலான பல்வேறு பிரச்சினைகள், தேவைகள், சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இறுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
