குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு.!
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் செம்புவத்தை தோட்டத்திற்கு அருகாமையில் இன்று அதிகாலை, 40 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் பிரதேசவாசிகளால் அவதானிக்கப்பட்டுள்ளது.
கண்டி கொழும்பு தனியார் பேருந்து ஒன்றில் பணிபுரியும் நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் ஹட்டன் வெளிஓயா பிரதேசத்தை சேர்ந்த திருமணமான இரண்டு குழந்தைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.
கடந்த 29 ம் திகதி முதல் இவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.



