நீருக்கடியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை.!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிரயாதீவு வாலியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீருக்கடியில் சூட்சுமமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையில் 8 பரள்களில் 800 லீட்டர் கோடா மற்றும் 160 லீட்டர் கசிப்பு பறிமுதல் செய்யப்பட்டதுடன், உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட பெருமளவு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எ.எஸ்.எம்.ஏ. றஹீம் தலைமையிலான குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.