கெஹெலிய காலத்து கொள்வனவுகள் குறித்து வெளிவரப்போகும் ‘தடவியல்’ அறிக்கை.!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், சுகாதார அமைச்சின் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ விநியோகக் கொள்வனவு நடவடிக்கைகள் குறித்து அரசாங்க கணக்காய்வாளர் நாயகத்தினால் தடவியல் கணக்காய்வு நடத்தப்படவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (மார்ச் 30) உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இதன் பின்னணியில், ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.