உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அனைத்து மாணவர்களுக்கும் தொழில்நுட்ப வாய்ப்புகள் – பிரதமர் உறுதி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய கல்வி முறைமையை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.கொழும்பில் அமைந்துள்ள புர்ஹானி செரண்டிப் சர்வதேச பாடசாலையில் நடைபெற்ற ‘உலக ரோபோ ஒலிம்பியாட்’ தேசியப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டார்.


நாடு முழுவதிலுமிருந்து 66 அணிகள் பங்கேற்ற இப்போட்டி, கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. “ரோபோக்கள் கலாசாரத்தைச் சந்திக்கின்றன” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, தங்களது புத்தாக்கங்களை காட்சிப்படுத்தினர்.


மேலும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில் கவனம் செலுத்துவதுதேசிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும், இத்தகைய போட்டிகள் இளம் தலைமுறையின் தர்க்க சிந்தனை மற்றும் புத்தாக்க திறன்களை மேம்படுத்த உதவுகின்றன என்றும் பிரதமர் தெரிவித்தார்.


2025 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச ரோபோ ஒலிம்பியாட் போட்டியில் இலங்கை இரண்டு அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

38 0 0
இலங்கை செய்திகள்

மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு.!

இலங்கையின் நாடக மற்றும் திரைப்படத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களின் நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி, நடிகரும்…

42 0 0
இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

34 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

42 0 0