பருத்தித்துறை நகர சபையில் உள்ளூராட்சி வாரமும் தேசிய வாசிப்பு மாதமும் இன்று.!
பருத்தித்துறை நகர சபையின் 2025ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரமும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் தவிசாளர் விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இன்று காலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்வின் ஆரம்பமாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், மங்கல விளக்கேற்றத்துடன் விழா தொடங்கப்பட்டது. தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை மற்றும் தலைமை உரை ஆகியவை இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து உள்ளூராட்சி மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் சன சமூக நிலைய உறுப்பினர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பதில் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சூரிகா சத்யரூபன் கலந்துகொண்டதுடன், முன்னாள் நகரசபை செயலாளர் அ.அ. நடராசா, உப தவிசாளர் தேவராஜேந்திரம் மற்றும் உறுப்பினர்கள் உட்படபலரும் பங்கேற்றனர்.
மேலும், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், சன சமூக நிலைய உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.