உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பருத்தித்துறை நகர சபையில் உள்ளூராட்சி வாரமும் தேசிய வாசிப்பு மாதமும் இன்று.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

பருத்தித்துறை நகர சபையின் 2025ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரமும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வும் தவிசாளர் விசன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இன்று காலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்வின் ஆரம்பமாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், மங்கல விளக்கேற்றத்துடன் விழா தொடங்கப்பட்டது. தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை மற்றும் தலைமை உரை ஆகியவை இடம்பெற்றன.


இதனைத் தொடர்ந்து உள்ளூராட்சி மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் சன சமூக நிலைய உறுப்பினர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பதில் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சூரிகா சத்யரூபன் கலந்துகொண்டதுடன், முன்னாள் நகரசபை செயலாளர் அ.அ. நடராசா, உப தவிசாளர் தேவராஜேந்திரம் மற்றும் உறுப்பினர்கள் உட்படபலரும் பங்கேற்றனர்.


மேலும், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், சன சமூக நிலைய உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

38 0 0
இலங்கை செய்திகள்

மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு.!

இலங்கையின் நாடக மற்றும் திரைப்படத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களின் நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி, நடிகரும்…

42 0 0
இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

34 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

42 0 0