உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மானிப்பாய் பிரதேச சபையில் அமளி: தவிசாளருக்கு எதிராக குற்றச்சாட்டு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் தவிசாளர் க. ஜெசீதன் தனது இயலாமையை காரணமாகக் காட்டி விசேட கூட்டத்தை நிறுத்தியதாக உறுப்பினர் பகீரதன் குற்றம் சாட்டிய நிலையில், சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது.


நேற்று நடைபெற்ற அமர்வில் இந்த விவகாரம் எழுந்ததுடன், தவிசாளர் கடந்த சில வாரங்களாக இந்தியா பயணத்தில் இருந்த நிலையில், விசேட கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் காரணமாக உப தவிசாளரை தலைமையாகக் கொண்டு கூட்டத்தை நடத்த உறுப்பினர்கள் முயற்சித்தனர்.


ஒரு மூன்றில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் கூட்டத்தை நடத்தலாம் என்ற விதிமுறைக்கு அமைவாக 11 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூட்டம் நடத்த முயற்சிக்கப்பட்டபோதும், அந்த கூட்டத்தில் தமக்கு எதிரான தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என்ற அச்சத்தால் தவிசாளர் கூட்டத்தை நிறுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், தவிசாளர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியினரே உட்பட பல உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததால் சபையில் அமளி நிலை ஏற்பட்டது.பின்னர், நிறுத்தப்பட்ட கூட்டத்தை எதிர்காலத்தில் எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதையடுத்து, அதனை குழுநிலை கூட்டமாக நடத்த தீர்மானிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

38 0 0
இலங்கை செய்திகள்

மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு.!

இலங்கையின் நாடக மற்றும் திரைப்படத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களின் நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி, நடிகரும்…

42 0 0
இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

34 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

42 0 0